Versions
TOV காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
IRVTA காகால் அந்த மக்களைப் பார்த்து: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடு சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைப் பார்த்து, மனிதர்கள் என்று நினைக்கிறாய் என்றான்.
ERVTA காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், "பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்" என்றான். ஆனால் சேபூல், "நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன" என்றான்.
RCTA காவால் அம்மக்களைப் பார்த்த போது சேபூலை நோக்கி, "இதோ மலைகளினின்று திரளான மக்கள் இறங்கி வருகின்றனர்" என்றான். அதற்கு அவன், "நீ மலைகளின் நிழலைக் கண்டு அவற்றை மனிதர் என்று எண்ணி ஏமாந்திருக்கிறாய்; இது உன் கண் மயக்கமே" என்றான்.
ECTA ககால் அவர்களைப் பார்த்துச் செபூலிடம், "இதோ! மக்கள் மலைகளின் உச்சிகளிலிருந்து இறங்குகின்றனர்" என்றான். அதற்குச் செபூல், "மலைகளின் நிழலை நீ மனிதர்களாகக் காண்கிறாய்" என்றான்.