Versions
TOV இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
IRVTA ஆசைப்பட்ட மக்களை அங்கே அடக்கம்செய்ததால், அந்த இடத்திற்குக் கிப்ரோத் அத்தாவா † பேராசையின் இச்சையின் கல்லறை. என்று பெயரிட்டான்.
ERVTA எனவே ஜனங்கள் அந்த இடத்திற்கு ‘கிப்ரோத் அத்தாவா’ என்று பெயர் வைத்தனர். இறைச்சி மேல் அதிக ஆசை கொண்டு மரித்தவர்கள் புதைக்கப்பட்ட இடம் என்று இதற்கு பொருள்.
RCTA அதனை முன்னிட்டு அந்த இடத்திற்கு இச்சைக் கோரி என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால், எவரெவர் இறைச்சி மீது இச்சை கொண்டிருந்தார்களோ அவர்களை அவ்விடத்தில் அடக்கம் செய்தார்கள்.
ECTA ஆகவே அந்த இடத்துக்கு கிப்ரோத்து அத்தாவா என்ற பெயர் வழங்கியது. ஏனெனில் பெருவிருப்புக் கொண்டிருந்த மக்களை அவர்கள் அங்கேயே புதைத்து விட்டனர்.