Versions
TOV என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.
IRVTA என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக.
ERVTA "நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால்,
RCTA ஆண்டவர் பொறுமையும் மிகுந்த இரக்கமும் உள்ளவர்; அவர் அக்கிரமத்தையும் பாவங்களையும் மன்னிக்கிறார்; அவர், தந்தையர்செய்த அக்கிரமத்தை அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நாலாம் தலைமுறை வரையிலும் விசாரிக்கிறார்; ஆனால், குற்றமில்லாதவர்களை ஆதரித்து வருகிறார் என்று நீரே ஆணையிட்டுக் கூறியதில்லையா?
ECTA "ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்; அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்; குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்; எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்; மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர்" என்றும் சொல்லியிருக்கிறீரே!