Versions
TOV அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
IRVTA அவள் விடியற்காலம்வரைக்கும் அவனுடைய பாதத்தின் அருகே படுத்திருந்து, களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்கு முன்னே எழுந்திருந்தாள்.
ERVTA எனவே ரூத், போவாஸின் காலருகே காலைவரை படுத்திருந்தாள். விடியும் முன், இருள் இருக்கும்போதே ரூத் எழுந்தாள். போவாஸ் அவளிடம், "நேற்று இரவு நீ இங்கே வந்தது. நமக்குள் இரகசியமாக இருக் கட்டும்" என்று கூறினான்.
RCTA எனவே, விடியும் வரை அவள் அவன் கால்மாட்டில் படுத்திருந்தாள். பின் ஒருவரை ஒருவர் அவர்கள் அடையாளம் அறிந்து கொள்ளும் முன்பே அவள் படுக்கையினின்று எழுந்தாள். போசு அவளை நோக்கி, "நீ இங்கே வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்க வேண்டாம்" என்றான்.
ECTA அவ்வாறே ரூத்து பொழுது புலரும்வரை அவர் அருகே படுத்திருந்தார். ஒரு பெண் களத்திற்கு வந்திருந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று போவாசு ஏற்கனவே அவரிடம் சொல்லியிருந்தார். அதற்கிணங்க, ஆள் அடையாளம் கண்டுகொள்ள இயலாத வைகறைப் பொழுதிலேயே ரூத்து எழுந்து விட்டார்.