Versions
TOV அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும்.
IRVTA அந்நாளில், கடல் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும். PE
ERVTA ஆகவே, "சிங்கங்களின்" சத்தமானது கடலலைகளின் இரைச்சல் போல் கேட்கும். கைப்பற்றப்பட்ட ஜனங்கள் தரையைப் பார்ப்பார்கள். அதில் இருள் மட்டுமே இருக்கும். கெட்டியான மேகத்தால் வெளிச்சம் கூட இருட்டாகி விடும்.
RCTA கடலின் பேரிரைச்சல் போல் அந்நாளில் அவர்கள் கர்ச்சித்து உறுமுவார்கள்; இந்த உலகத்தை ஏறெடுத்துப் பார்த்தாலோ, இதோ, எங்கும் இருளும் துன்பமுமே நிறைந்திருக்கும். மேகங்கள் ஒளியை இருளச் செய்யும்.
ECTA அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல் இஸ்ரயேலுக்கு எதிராக இரைந்து உறுமுவார்கள்; நாட்டை ஒருவன் பார்க்கையில், இருளும் துன்பமுமே காண்பான்; மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.