Versions
TOV ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.
ERVTA ஆகையால் இப்பொழுது பரிசேயர்கள் அந்த மனிதனிடம், எப்படி நீ பார்வை பெற்றாய்? என மீண்டும் கேட்டனர். அதற்கு அந்த மனிதன், அவர் என் கண்களின் மேல் சேற்றைப் பூசினார். நான் கழுவினேன். இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது என்றான்.