Versions
TOV ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
IRVTA ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயர்களின் பட்டணத்திலிருந்து புறப்படச்செய்து, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பெயரிட்ட தேவனாகிய யெகோவா நீர்.
ERVTA நீரே தேவனாகிய கர்த்தர். நீர் ஆபிராமைத் தேர்ந் தெடுத்தீர். பாபிலோனிலுள்ள ஊரிலிருந்து அவரை வழிநடத்தினீர். அவனது பெயரை ஆபிரகாம் என்று மாற்றினீர்.
RCTA கடவுளாகிய ஆண்டவரே, ஆபிராமைத் தேர்ந்தெடுத்து ஊர் என்னும் கல்தேய நகரினின்று அவரை வெளியே கொணர்ந்து, அவருக்கு ஆபிரகாம் என்ற பெயரை இட்டவர் நீரே!
ECTA ஆபிராமைத் தேர்ந்தேடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே!