Versions
TOV அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
IRVTA அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
ERVTA அம்மக்கள், அவர், மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அவர் எங்கே? நம் தந்தையர் மரித்திருக்கிறார்கள். ஆனால் படைப்பின் ஆரம்பத்திலிருந்து உலகம் இந்த வகையிலேயே தொடர்கிறது என்பார்கள்.
RCTA தங்கள் இச்சைகளின்படி நடக்கும் இவர்கள், "அவர் வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையர் இறந்துபோயினார்; ஆயினும் படைப்பின் தொடக்கத்திலிருந்தது போல எல்லாம் அப்படியே இருக்கின்றதே!" என ஏளனமாய்ப் பேசுவர்.
ECTA அவர்கள், "அவரது வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர்; ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கிறதே" என்று சொல்லுவார்கள்.