Versions
TOV அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
IRVTA அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
ERVTA பிறகு நீர் யார்? நீர் எலியாவா? என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். இல்லை. நான் எலியா இல்லை என்று யோவான் பதிலுரைத்தான். நீர் தீர்க்கதரிசியா? என யூதர்கள் கேட்டனர். இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை என்றான் யோவான்.
RCTA "பின் என்ன ? நீர் எலியாசோ ?" என்று அவரைக் கேட்க, "நானல்லேன்" என்றார். "நீர் இறைவாக்கினரோ ?" என, "அல்லேன்" என்றார்.
ECTA அப்போது, "அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?" என்று அவர்கள் கேட்க, அவர், "நானல்ல" என்றார் "நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?" என்று கேட்டபோதும், அவர், "இல்லை" என்று மறுமொழி கூறினார்.