Versions
TOV ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
IRVTA இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
ERVTA காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம்," பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!" என்றான். அரசன், "அவனும் செய்திக் கொண்டு வருகிறான்" என்றான்.
RCTA காவலன் வேறெருவன் ஓடிவருவதைக் கண்டு, "அதோ இன்னும் ஒருவன் தனியே ஓடி வருகிறான்" என்று மேலிருந்து சப்தமிட்டுச் சொன்னான். அதற்கு அரசர், "அவன் கொண்டு வருவதும் நற்செய்தியே" என்றார்.
ECTA காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு அவன் குரலெழுப்பி வாயில் காப்போனிடம். "இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான் "என்று கூற அரசர், "இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான் "என்றார்.