Versions
TOV மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
IRVTA மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
ERVTA "ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும் எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன்" என்று எண்ணினேன். நான் எனக்குள், "ஞானமுள்ளவனாக இருப்பதும் பயனற்றதே" என்று சொன்னேன்.
RCTA அப்பொழுது நான் சிந்திக்கத் தொடங்கி: மூடனுக்கும் சாவு நேரிடும், எனக்கும் நேரிடும் என்றால், நான் அதிகமாய்ப் படித்திருப்பதினால் பயன் என்ன என்று யோசித்து, அதுவும் வீண்தான் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
ECTA மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வீணே என்ற முடிவுக்கு வந்தேன்.