Versions
TOV அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
IRVTA அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் * முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; திராட்சைச்செடியில் குலைகள் இராது, அத்திமரத்தில் பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
ERVTA "நான் அவர்களுடைய பழங்களையும் விளைச் சலையும் எடுத்துக்கொள்வேன். எனவே, அங்கே அறுவடை இருக்காது" என்று கர்த்தர் சொல்லுகிறார். "திராட்சைத் தோட்டத்தில் பழங்கள் இராது. அத்திமரத்தில் அத்திப்பழங்கள் இராது. இலைகள் கூட காய்ந்து உதிர்ந்துவிடும். நான் அவர்களுக்குக் கொடுத்தப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள்வேன்.
RCTA "ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களை ஒருமிக்கச் சேர்க்கும் போது, திராட்சைக் கொடிகளில் பழங்கள் இருக்கமாட்டா; அத்தி மரங்களில் கனிகள் கிடைக்கமாட்டா; இலைகள் உதிர்ந்து போம்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவை, அவர்கள் கையிலிருந்து நழுவிப் போய்விடும்."
ECTA நான் கனிகளை ஒன்று சேர்க்க விரும்பினேன். ஆனால், திராட்சைக் கொடியில் பழங்கள் இல்லை; அத்தி மரங்களில் கனிகள் இல்லை. இலைகள்கூட உதிர்ந்து போயின. நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களிடமிருந்து நழுவிப் போயிற்று.