Bible Versions
Bible Books

1 Chronicles 21:15 (YLT) Young's Literal Translation

Versions

TOV   எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.
IRVTA   எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது யெகோவா பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; யெகோவாவுடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான்.
ERVTA   தேவன், எருசலேமை அழிக்க ஒரு தூதனை அனுப்பினார். ஆனால், அத்தூதன் எருசலேமை அழிக்கத் தொடங்கும்போது, கர்த்தர் அதனைப் பார்த்து வருத்தப்பட்டார். கர்த்தர் அத்தூதனிடம், "நிறுத்து! இதுபோதும்!" என்றார். கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஓர்னானின் களத்தருகில் நின்றான்.
RCTA   யெருசலேமையும் தண்டிக்க ஆண்டவர் ஒரு தூதரை அனுப்பினார். அத்தூதுவர் நகரைத் தண்டித்த போது ஆண்டவர் அந்த மாபெருந் தீங்கைப் பார்த்து மனமிரங்கினார். எனவே உயிர்களைப் பறித்துக் கொண்டிருந்த தூதரை நோக்கி, "போதும்; இப்போது உன் கையை நிறுத்து" என்று கட்டளையிட்டார். ஆண்டவரின் தூதர் அப்பொழுது செபுசையனான ஒர்னானுடைய களத்தருகே நின்று கொண்டிருந்தார்.
ECTA   பின்னர், எருசலேமை அழிக்கக் கடவுள் ஒரு தூதரை அனுப்பினார். எனினும், அவர் அவ்வாறு அழிக்கும்போது ஆண்டவர் அந்தத் தீங்கைப் பார்த்து மனம் வருந்தி, அழித்துக் கொண்டிருந்த தூதரைப் பார்த்து, "போதும் உடனே நிறுத்து!" என்று கட்டளையிட்டார். அந்நேரம் ஆண்டவரின் தூதர் எபூசியனான ஒர்னானின் களத்தருகில் நின்று கொண்டிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us