Versions
TOV ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.
IRVTA ஏழாவது முறை இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனிதனுடைய உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடி இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.
ERVTA ஏழாவது முறை வேலைக்காரன், "மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்" என்றான். எலியா அவனிடம், "ஆகாப் அரசனிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைதடுத்துவிடும்" என்றான்.
RCTA ஏழாம் முறை அவன் சென்று பார்த்தபோது, இதோ மனிதனின் அடிச் சுவட்டை ஒத்த ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்பி வந்தது. அப்போது எலியாசு தம் ஊழியனை நோக்கி, "நீ போய் ஆக்காபுக்கு: 'நீர் மழையில் அகப்பட்டுக் கொள்ளாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்' என்று சொல்" என்றார்.
ECTA ஏழாம் முறை அவன் சென்று பார்த்து "இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது" என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, "நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்" என்றார்.