Versions
TOV அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
IRVTA {அம்மோனிய ராஜாவாகிய நாகாஸ்} PS அந்தக் காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றுகையிட்டான்; அப்பொழுது யாபேசின் மனிதர்கள் எல்லோரும் நாகாசை நோக்கி: எங்களோடு உடன்படிக்கைசெய்துகொள்; அப்பொழுது உமக்கு பணிவிடை செய்வோம் என்றார்கள்.
ERVTA ஒரு மாத்திற்குப்பின் நாகாஸ் தன் சேனையோடு யாபேஸ் கீலேயாத்தின் நகரை முற்றுகையிட்டான். யாபேஸ் ஜனங்கள் நாகாஸை நோக்கி, "நீங்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்துக்கொண்டால் உங்களுக்குச் சேவை செய்வோம்" என்றனர்.
RCTA ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் நிகழ்ந்ததாவது: அம்மோனியனாகிய நாவாஸ் எழுந்து காலாதில் ஜாபேசுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினான். ஜாபேசின் மனிதர்கள் எல்லாம் நாவாசை நோக்கி, "எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்; அப்போது நாங்கள் உனக்குப் பணிவிடை செய்வோம்" என்று சொன்னார்கள்.
ECTA அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபேசை முற்றுகையிட்டான். யாபேசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, "எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்" என்றனர்.