Bible Versions
Bible Books

2 Kings 4:31 (YLT) Young's Literal Translation

Versions

TOV   கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.
IRVTA   கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைச் சிறுவனின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: சிறுவன் கண் விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.
ERVTA   அவர்களுக்கு முன்னால் கேயாசி அப்பெண்ணின் வீட்டை அடைந்தான். அவன் கைத்தடியை பிள்ளையின் முகத்தில் வைத்தான். ஆனால் அந்தக் குழந்தை பேசவோ பேச்சுக்கு பதிலாக அசையவோ இல்லை. எனவே கேயாசி எலிசாவிடம் ஓடிவந்து, "குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை!" என்று கூறினான். மீண்டும் உயிரடைகிறான்
RCTA   ஜியேசியோ இவர்களுக்கு முன்பே நடந்து போய் ஊன்று கோலைச் சிறுவனின் முகத்தின் மேல் வைத்திருந்தான். ஆயினும் சிறுவனுக்கு உணர்வுமில்லை, பேச்சுமில்லை என்று கண்டு, திரும்பித் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, "சிறுவன் உயிர் பெறவில்லை" என அறிவித்தான்.
ECTA   எனவே எலிசா எழுந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார். கேகசி இவர்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்று, ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான். ஆயினும் பிள்ளைக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. எனவே அவன் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, "பிள்ளை கண் திறக்கவில்லை" என்று அறிவித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us