Versions
TOV உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.
IRVTA உன்னுடைய கைகள் கட்டப்படவும் இல்லை;
உன்னுடைய கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை;
அக்கிரமக்காரர்களுடைய கையில் இறக்கிறதுபோல இறந்தாயே” என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் பின்னும் அதிகமாக அவனுக்காக அழுதார்கள். PEPS
ERVTA அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை. கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!" அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர்.
RCTA உன் கைகளில் விலங்கு போடப்பட்டதும் இல்லை; உன் பாதங்களில் தளை பூட்டப்பட்டதும் இல்லை; அக்கிரமிகளின் கையில் அகப்பட்டு இறக்கிறவர்களைப் போல் நீயும் இறந்தாய்" என்றார். அப்பொழுது மக்கள் எல்லாரும் அரசர் சொன்ன வார்த்தைகளைத் திரும்பச் சொல்லிக் கண்ணீர் விட்டனர்.
ECTA உன் கைகள் விலங்கிடப்படவில்லை; உன் பாதங்கள் கட்டப்படவில்லை; தீயோர் முன் வீழ்பவன் போல, நீயும் வீழ்ந்தனயே! மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காக புலம்பினார்கள்.