Versions
TOV இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
ERVTA பார், எனது ஆண்டவர் பலமும் தைரியமும் கொண்டவராக இருக்கிறார். அவர் பெருங்காற்றும் கல்மழையும் கொண்ட நாட்டுக்குள் வருவார். அவர் ஒரு புயலைப் போன்று நாட்டுக்குள் வருவார். அவர் ஒரு சக்திவாய்ந்த ஆறு நாட்டுக்குள் பெருக்கெடுத்து வருவதுபோன்று இருப்பார். அவர் அந்தக் கிரீடத்தை (சமாரியா) தரையில் தள்ளுவார்.