Versions
TOV நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
IRVTA நீர் போய், சூசானில் இருக்கிற யூதர்களையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமலும் குடிக்காமலுமிருந்து, எனக்காக உபவாசம் இருங்கள்; நானும் என்னுடைய பணிவிடைப்பெண்களும் உபவாசம் இருப்போம்; இப்படியே சட்டத்தை மீறி, ராஜாவிடம் போவேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA நீர் போய்ச் சூசாவில் உள்ள யூதர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லாரும் எனக்காக வேண்டிக் கொள்ளச் செய்யும். மூன்று நாள் இரவு பகலாக ஒன்றும் உண்ணாமலும் குடிக்காமலும் என் பொருட்டு அவர்கள் நோன்பு இருக்க வேண்டும். நானும் என் தோழியரும் அவ்வாறே நோன்பு காப்போம். பின் நான் சாவுக்கும் ஆபத்திற்கும் அஞ்சாமல் சட்டத்திற்கு மாறாக அழைக்கப்படாமலேயே அரசரிடம் செல்வேன்" என்றாள்.
ECTA சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக! எனக்காக நோன்பிருந்து மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.