Versions
TOV அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
IRVTA அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
ERVTA யாக்கோபின் பிற மகன்களும், மகள்களும் அவனுக்கு ஆறுதல் கூற முயன்றார்கள். ஆனால் அவன் ஆறுதல் அடையவில்லை. "நான் மரிக்கும்வரை என் மகனுக்காக வருத்தப்படுவேன்" என்று கூறினான்.
RCTA அவன் புதல்வர் புதல்வியர் அனைவரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த போது, அவன் எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவி கொடாமல்: நான் துக்கத்தோடே பாதாளத்தில் இறங்கி என் மகனிடத்திற்குப் போகிறேன் என்றான். அவன் இவ்விதமாய் சூசையைப் பற்றி அழுது புலம்பிக் கொண்டிருக்கையில்,
ECTA அவர் புதல்வர், புதல்வியர் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தனர். அவரோ எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவிகொடாமல், "நான் துயருற்றுப் பாதாளத்தில் இறங்கி என் மகனிடம் செல்வேன்" என்று அவருக்காக அழுது புலம்பினார்.