Versions
TOV மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?
IRVTA மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல் சிலையைப் பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ, அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?
ERVTA மரச் சிலையைப் பார்த்து "எழும்பு!" என்று சொல்கிறவன் மிகவும் மோசமானவன். பேசமுடியாத ஒரு கற்சிலையிடம் ஒருவன் "விழித்தெழு!" என்று கூறுவது அவனுக்கு மிகவும் கேடானது. அவை அவனுக்கு உதவாது. அச்சிலை வேண்டுமானால் பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருக்கலாம், ஆனால் அச்சிலைக்குள் உயிரில்லை.
RCTA மரக்கட்டையிடம் 'விழித்துப் பாரும்' என்றும், ஊமைக் கல்லிடம் 'எழுந்திரும்' என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வாக்குரைக்க முடியுமோ? இதோ, பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருப்பினும் உள்ளுக்குள் கொஞ்சமும் உயிரில்லையே!
ECTA மரக்கட்டையிடம், 'விழித்தெழும்' என்றும் ஊமைக் கல்லிடம் 'எழுந்திடும்' என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!