Versions
TOV அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
IRVTA அவர்கள் யெகோவாவுக்குத் திராட்சைரசத்தின் பானபலியை ஊற்றுவதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாக இருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைச் சாப்பிடுகிற அனைவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கே உரியது, அது யெகோவாவுடைய ஆலயத்தில் வருவதில்லை.
ERVTA இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குத் திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாக அளிப்பதில்லை. அவருக்கு அவர்கள் பலிகள் கொடுப்பதுமில்லை. அவர்கள் கொடுக்கிற பலிகள் மரித்தவர் வீட்டில் கொடுக்கிற உணவைப்போலிருக்கும். அதைச் சாப்பிடுகிறவர்கள் அசுத்தமடைவார்கள். அவர்கள் அப்பம் கர்த்தருடைய ஆலத்திற்குள் போகாது. அவர்களே அதை உண்ண வேண்டியதிருக்கும்.
RCTA ஆண்டவருக்கு இரசத்தைத் தாரைப் பலியாய் வார்க்க மாட்டார்கள், தங்கள் பலிகளால் அவருக்கு உகந்தவர்கள் ஆக மாட்டார்கள், அவர்களுடைய உணவு இழவு வீட்டாரின் உணவு போலாம், அதை உண்பவர் யாவரும் தீட்டுப் படுவார்கள். ஏனெனில் அவர்களின் உணவு அவர்கள் வயிற்றில் தான் செல்லும், ஆண்டவரின் கோயிலில் அது படைக்கப்படாது,
ECTA திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்; அவர்களின் பலிகள் அவருக்கு உகந்தவை ஆகமாட்டா; அவை அவர்களுக்கு இழவு வீட்டு உணவு போலிருக்கும்; அவற்றை உண்பவர் யாவரும் தீட்டுப்படுவர்; ஏனெனில், அவை அவர்களின் பசி தீர்க்கும் உணவே ஆகும். ஆண்டவரின் கோவிலில் அவை படைக்கப்படுவதில்லை.