Versions
TOV அப்பொழுது திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.
IRVTA அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.
ERVTA ஜனங்கள் ஆபத்தைப்பற்றி கேள்விப்படுவார்கள். அவர்கள் அச்சப்படுவார்கள். சில ஜனங்கள் வெளியே ஓடுவார்கள். ஆனால், அவர்கள் குழிக்குள் விழுவார்கள்; வலைக்குள் அகப்படுவார்கள் சில ஜனங்கள் குழியிலிருந்து வெளியே ஏறி வருவார்கள். ஆனால், அவர்கள் இன்னொரு வலைக்குள் அகப்படுவார்கள்". வானத்தில் உள்ள வெள்ளத்தின் கதவுகள் திறக்கும். வெள்ளம் பெருகத்தொடங்கும். பூமியின் அஸ்திபாரம் அசையும்.
RCTA திகில் தரும் இரைச்சல் கேட்டு ஓடுபவன் படுகுழியில் விழுவான், படுகுழிக்குத் தப்பி ஏறியோடுபவன் கண்ணியில் மாட்டிக் கொள்வான். தீர்ப்புப்பற்றிய கவிதையின் தொடர்ச்சி: வானத்து நீர்மடைகள் திறக்கப்படும், பூமியின் அடிப்படைகள் ஆட்டங்கொள்ளும்.
ECTA திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்; படுகுழியிலிருந்து ஏறுகின்றவர் கண்ணியில் சிக்கிக் கொள்வார்; ஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன; நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.