Versions
TOV இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
ERVTA மீண்டும் பேதுருவிடம் இயேசு யோவானின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா? என்று கேட்டார். ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும் என்று பேதுரு சொன்னான். பிறகு பேதுருவிடம் இயேசு, எனது மந்தையைக் கவனித்துக்கொள் என்று சொன்னார்.