Versions
TOV அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.
IRVTA அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
ERVTA அதற்கு அவன், இயேசு என்று மக்களால் அழைக்கப்படுகிற அந்த மனிதர் ஏதோ சேறு உண்டாக்கினார். அதனை என் கண்களின் மீது தடவினார். பிறகு அவர் என்னிடம் சீலோவாம் குளத்தில் போய் கழுவச் சொன்னார். ஆகையால் நான் போய் கழுவினேன். பின்னர் என்னால் பார்க்க முடிந்தது என்றான்.
RCTA அவன், "இயேசு என்பவர் சேறுண்டாக்கி என் கண்களில் பூசி, 'சீலோவாம் குளத்திற்குப் போய்க் கழுவு' என்றார். நான் போய்க் கழுவினேன், பார்வை பெற்றேன்" என்றான்.
ECTA அவர் அவர்களைப் பார்த்து, "இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, "சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்" என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது" என்றார்.