Versions
TOV கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
IRVTA யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்;
அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
ERVTA அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான். எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான். ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான். இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். அரசனைப் பற்றி நாம், "நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம். அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்" என்று சொல்லியிருந்தோம்.
RCTA ரேஷ்: ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டு நமக்கு வாழ்வின் மூச்சாய் இருந்தவர் அவர்களுடைய படுகுழியில் பிடிபட்டார்; "புறவினத்தார் நடுவில் உம் நிழலில் வாழ்வோம்" என்று அவரைக் குறித்தே நாம் சொல்லி வந்தோம்.
ECTA ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்! "அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம்" என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!