Versions
TOV நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
IRVTA நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. PE
ERVTA யோசேப்பு நாசரேத் என்னும் நகருக்குச் சென்று அங்கு வசித்தான். எனவே தேவன் தீர்க்கதரிசிகள் வாயிலாக "கிறிஸ்து நசரேயன் என்று அழைக்கப்படுவார்" என சொன்னது நடந்தேறியது.
RCTA சென்று, நாசரேத்து என்னும் ஊரில் குடியிருந்தார். இவ்வாறு, ' நாசரேயன் எனப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.
ECTA அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார். இவ்வாறு, 'நசரேயன்' என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.