Versions
TOV என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
IRVTA என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள்.
ERVTA நான் அந்த ஜனங்களிடம் தேவன் என்னிடம் கருணையோடு இருப்பதைப் பற்றியும் சொன்னேன். அரசன் என்னிடம் சொல்லியிருந்தவற்றைப் பற்றியும் நான் அவர்களிடம் சொன்னேன். பிறகு அந்த ஜனங்கள், "இப்பொழுது நாம் வேலையை ஆரம்பிக்கலாம்" என்று பதிலுரைத்தனர். எனவே இந்த நல்ல வேலையை நாங்கள் தொடங்கினோம்.
RCTA என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும் அரசர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். பின்னர், "நாம் எழுந்து மதில்களைக் கட்டுவோம்" என்றேன். அதனால் இந்த நற்பணி செய்ய விருப்பமுடன் மக்கள் முன்வந்தனர்.
ECTA என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் ";வாரும் கட்டுவோம்" என்றனர்; நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.