Versions
TOV அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
IRVTA அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் தீமை செய்யத் துவங்கினார்கள்; ஆகையால் அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆள, அவர்களுடைய கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
ERVTA பிறகு இளைப்பாறுதல் பெற்ற உடனேயே எங்கள் முற்பிதாக்கள் உமக்கு முன் மீண்டும் பொல்லாப்புகளைச் செய்யத் தொடங்கினார்கள்! எனவே அவர்களைப்பகைவர் தோற்கடித்து தண்டிக்கும்படி விட்டுவிட்டீர். அவர்கள் உம்மை உதவிக்கு அழைத்தனர். பரலோகத்திலிருந்து நீர் அதனைக் கேட்டு அவர்களுக்கு உதவினீர். நீர் மிகவும் இரக்கமுள்ளவர்! அது பலதடவை நிகழ்ந்தது.
RCTA தாங்கள் அமைதியுற்ற பின்னரோ உம் திருமுன் பாவம் செய்யத் தலைப்பட்டனர்; நீர்அவர்களுடைய எதிரிகளின் கைகளில் அவர்களை ஒப்படைத்தீர்; எதிரிகளும் அவர்களைத் தமக்குக் கீழ்ப்படுத்தினர். எனவே அவர்கள் மறுபடியும் உம்மிடம் வந்து கூக்குரலிட்டார்கள்; நீரோ விண்ணிலிருந்து அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டருளுனீர்; அவர்களுக்கு இரக்கம் காட்டிப் பலமுறையும் அவர்களுக்கு விடுதலை அளித்தீர்.
ECTA அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கதின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர்.