Versions
TOV அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
IRVTA அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று:
ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே!
ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள். PEPS
ERVTA அவளது துன்பத்தைக் கண்டு அரசர்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்: பயங்கரம்! எவ்வளவு பயங்கரம், மாநகரமே, சக்திமிக்க பாபிலோன் நகரமே! உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது!
RCTA அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று, 'ஐயோ! ஐயோ! வல்லமை மிக்க நகரே! பாபிலோன் மாநகரே ஒரு மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்து விட்டதே" என்று அழுது புலம்புவார்கள்.
ECTA அவள் படும் வேதனையைக் கண்டு அஞ்சித் தொலையில் நின்று கொண்டு, "ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே! அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே உனக்குக் கேடு வந்ததே! ஒரே மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே. "என்பார்கள்.