Versions
TOV அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.
IRVTA அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற யெகோவாவாலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள்.
ERVTA அத்துடன் "போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் ஒருவன்" என்றாள்.
RCTA அதற்கு நோயேமி, "ஆண்டவரால் அவன் ஆசீர்வதிக்கப்படக்கடவான்! ஏனெனில் அவன் உயிரோடிருக்கிறவர்களுக்குச் செய்து வந்த உதவியை இறந்தோர்க்கும் செய்து வருகிறான்" எனப் பதில் கூறினாள். மீண்டும் மருமகளைப் பார்த்து, "அம்மனிதன் நம் உறவினன்தான்" என்றாள். அப்பொழுது ரூத், "வெள்ளாண்மை முழுவதையும் அறுத்து முடியும் வரை
ECTA நகோமி அவரிடம், "அப்படியா? வாழ்வோருக்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக" என்றார். மேலும் அவர், "போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்; நம்மைக் காப்பாற்றும் கடமையுள்ள முறை உறவினரும் ஒருவர்" என்றார்.