Versions
TOV அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.
IRVTA அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் வேலைக்காரர்களுக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்கும் கரிசனையோடு வரிவிலக்கு உண்டாக்கி, தன்னுடைய கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு வெகுமானங்களைக் கொடுத்தான். PS
ERVTA அரசன் எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய அரசன். பற்றி அறிகிறான்
RCTA பிறகு எஸ்தரின் திருமண விழாவை முன்னிட்டுத் தன் சிற்றரசர் அனைவருக்கும் தன் பணியாளருக்கும் சிறந்ததொரு விருந்து அளிக்கக் கட்டளையிட்டான். மேலும், தன் மாநிலங்கள் முழுவதும் அந்நாளை விடுமுறையாகக் கொண்டாடும்படி பணித்து, அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்குத் தன் அரச மகிமைக்கு ஏற்றபடி பரிசுகளும் வழங்கினான்.
ECTA இவற்றிற்குப்பின், எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும் தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை நாளை அறிவித்துத் தம்; கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.