Bible Versions
Bible Books

Lamentations 1:7 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.
IRVTA   தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே
எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்;
அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது,
பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
ERVTA   எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள். எருசலேம் தான் பாதிக்கப்பட்டு தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள். அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள். அவள் பழைய நாட்களில் பெற்ற சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள். அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை எண்ணிப் பார்க்கிறாள். அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத நிலையை எண்ணுகிறாள். அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள். ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள்.
RCTA   ஸாயின்: துன்பத்தின் கசப்பு நிறைந்த நாட்களில் பண்டை நாளில் அனுபவித்த இன்ப சுகங்களை, யெருசலேம் இன்று நினைத்துப் பார்க்கிறாள்; அவளுடைய மக்கள் பகைவர் கையில் சிக்கி உதவி செய்வாரின்றி அவள் வீழ்ந்த போது, அவளைப் பார்த்துப் பகைவர் நகையாடினர்.
ECTA   எருசலேம், தன் துன்ப நாள்களிலும், அகதியாய் வாழ்ந்தபோதும், முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்; அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்; அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை; அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள் அவளை ஏளனம் செய்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us