Versions
TOV ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சபழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.
IRVTA {இஸ்ரவேலுடைய பாவத்தினால் வந்த துயரம்} PS ஐயோ, கோடைக்காலத்தின் பழங்களைச் சேர்த்து, திராட்சைபழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; சாப்பிடுவதற்கு ஒரு திராட்சைக்குலையும் என் ஆத்துமா விரும்பிய முதல் அறுப்பின் பழமும் இல்லை.
ERVTA நான் கலக்கமடைந்தேன். ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன். பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன். உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும். நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும்.
RCTA ஐயோ! நான் கோடைக்காலத்தில் அறுவடை செய்பவன் போலானேன், திராட்சையறுப்புக்குப் பின் பழம் பறிக்கப் போகிறவன் போலானேன். தின்பதற்குத் திராட்சைக் குலை ஒன்று கூட இல்லை, என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழமும் இல்லை.
ECTA ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக் கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்; திராட்சை பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்; அப்பொழுது தின்பதற்கு ஒரு திராட்சைக் குலையும் இல்லை; என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட இல்லை;