Versions
TOV இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச்சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
IRVTA இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண்,
என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது;
என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்;
பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
ERVTA "நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன். எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது. எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை. என்னைத் தேற்ற எவருமில்லை. எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர். ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்."
RCTA ஆயீன்: "ஆதலால் தான் நான் அழுகின்றேன், என் கண்களும் கண்ணீர் பெருக்குகின்றன; ஏனெனில் தேற்றுகிறவர் எனக்குத் தெலைவிலிருக்கிறார், புத்துயிரூட்டக் கூடியவர் அகன்று போனார்; என் மக்கள் நொறுங்குண்டு நாசமானார்கள், ஏனெனில் பகைவன் கை வலுத்துவிட்டது."
ECTA இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்; என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன; என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்; பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர்.