Versions
TOV அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
IRVTA அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
ERVTA எனவே எலியா ஆகாபிடம் சென்றான். அரசனோ அவனிடம், "என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்" என்றான். அதற்கு எலியா, "ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய்.
RCTA அப்போது ஆக்காப் எலியாசை நோக்கி, "நான் உனக்கு எதிரியாக எப்போதாவது இருக்கக் கண்டதுண்டா?" என்றான். அதற்கு அவர், "ஆம்; நீ ஆண்டவர் திருமுன் தீயன புரியத் துணிந்துள்ளதை நான் அறியேனோ?
ECTA அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, "என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?" என்று கேட்டான். அதற்கு அவர் "ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய்.