Versions
TOV அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
IRVTA அப்படியே யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
ERVTA கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார். அவர்கள் சீயோனுக்கு மகிழ்ச்சியோடு திரும்புவார்கள். அவர்கள மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களது மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் என்றென்றும் இருக்கிற கிரீடம்போல் இருக்கும். அவர்கள் மகிழ்ச்சியோடு பாடுவார்கள். அனைத்து துக்கங்களும் வெளியே போகும்.
RCTA அவ்வாறே இப்பொழுதும் ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாய்ப் பாடிக்கொண்டு சீயோனுக்குத் திரும்புவார்கள்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்களுக்கு மணிமுடியாகச் சூட்டப்படும், அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவார்கள்; துன்பமும் அழுகையும் ஒழிந்துபோம்.
ECTA ஆண்டவரால் மீட்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் தங்கும்; அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்; துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.