Versions
TOV நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
IRVTA நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
ERVTA நன்மையைப் புரிந்துகொண்ட ஜனங்கள் என்னைக் கவனிக்கட்டும். என் போதனைகளைப் பின்பற்றுகிற ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். தீயவர்களுக்காக அஞ்சவேண்டாம்! அவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் தீயவற்றுக்கு அஞ்ச வேண்டாம்!
RCTA நீதியை உணர்ந்திருக்கும் மக்களே, நம் திருச்சட்டம் எழுதப்பட்ட இதயத்தைக் கொண்டவர்களே, நாம் சொல்வதைக் கேளுங்கள்: மனிதர்களின் நிந்தைக்கு அஞ்சவேண்டா, அவர்களுடைய பழிப்புரைக்குக் கலங்க வேண்டா.
ECTA நேர்மைதனை அறிந்தோரே, என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள்; மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்; அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள்.