Versions
TOV அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
IRVTA அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏமாற்றி, என்னுடைய எதிரியைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
ERVTA சவுல், மீகாளிடம், "ஏன் என்னிடம் நீ தந்திரம் செய்கிறாய்?" நீ எனது எதிரியை தப்பிக்கவிட்டாய்!" என்று கேட்டான். அவள், "தாவீது தப்பிக்க நான் உதவி செய்யாவிட்டால் அவர் என்னை கொன்றுவிடுவதாகச் சொன்னார்!" என்றாள்.
RCTA பிறகு சவுல் மிக்கோலைப் பார்த்து, "என்னை ஏன் இப்படி ஏமாற்றினாய்? என் பகைவனை ஏன் தப்பவிட்டாய்?" என்று கேட்டார். மிக்கோல் அவரை நோக்கி, "'அவர் என்னைப் போகவிடு, இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்று போடுவேன்' என்று என்னிடம் சொல்லி மிரட்டினார்" என்றாள்.
ECTA சவுல் மீக்காலிடம் என் பகைவனை தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் என்னை வஞ்சித்தாய்? என்று கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், என்னை போகவிடு; இல்லையெனில் உன்னைக் கொன்று விடுவேன்; என்று அவர் மிரட்டினார்" என்று மறுமொழி கூறினாள்.