Versions
TOV ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.
IRVTA ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைதட்டு; வாள் மூன்றுமுறை இரட்டித்துவரும்; அது கொலை செய்யப்பட்டவர்களின் வாள்; அது கொலைசெய்யப்படப்போகிற பெரியவர்களின் உள் அறைகளில் நுழைகிற வாள்.
ERVTA தேவன் சொன்னார்: ‘மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு. எனக்காக ஜனங்களிடம் பேசு. ‘இந்த வாள் கீழே இரண்டுமுறை வரட்டும்! மூன்று முறை வரட்டும். இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது! இந்த வாள் பெருங் கொலைக்குரியது. இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது.
RCTA நீயோ, மனிதா, கையோடு கைதட்டு, வாள் கொடுமை இரட்டிக்கட்டும்; ஆம் கொல்லப்பட வேண்டியவர்களுக்காக அது மும்முறையாகட்டும். அனைவரையும் கொலை செய்யும் வாள் அதுவே; யாவரையும் நடுங்கச் செய்யும் வாள் அதுவே;
ECTA மானிடா! நீயோ இறைவாக்குரை; கை கொட்டு; இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்; கொலைக்கான வாள் அது; அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.