Versions
TOV என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
IRVTA தெரிந்தக்கொண்ட என் ஜனத்தை கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலிமையான எருதுகளைப்போல முழக்கம் போடுகிறீர்களே.
ERVTA "பாபிலோனே, நீ சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தாய். நீ என் நாட்டை எடுத்தாய். நீ ஒரு இளம்பசு தானியங்களுக்குள் புகுந்ததுப்போன்று சுற்றிலும் ஆடுகிறாய். குதிரைகள் செய்வதுப்போன்று உனது சிரிப்பு சந்தோஷ ஒலியாக உள்ளது.
RCTA "நம் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே, நீங்கள் அக்காளித்தாலும், அகமகிழ்ந்தாலும், மேய்ச்சலுக்குப் போன காளை போலக் கும்மாளம் அடித்தாலும், வலிமை மிக்க வரிக்குதிரைகள் போலக் கனைத்தாலும்,
ECTA என் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே, நீங்கள் அக்களித்தாலும், அகமகிழ்ந்தாலும், புல்கண்ட இளம்பசுபோல் துள்ளிக் குதித்தாலும், பொலிகுதிரைப்போலக் கனைத்தாலும்,