Versions
TOV ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
IRVTA ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது.
ERVTA ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, ԅகர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும். கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.
RCTA ஆயினும், கடவுளிட்ட உறுதியான அடித்தளம் நிலையாய் நிற்கிறது. அதன்மேல் 'ஆண்டவர் தம்மவரை அறிவார்' என்றும், 'ஆண்டவருடைய பெயரை உச்சரிப்பவன் எவனும் அநீதியினின்று விலகி நிற்பானாக' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
ECTA கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் "ஆண்டவர் தம்முடையோரை அறிவார்" என்றும், "ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.