Versions
TOV பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
IRVTA பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
ERVTA பிறகு அந்தத் தூதன் என்னிடம் அந்த வேசி உட்கார்ந்திருக்கிற நீர்நிலைகளைப் பார்த்தாய் அல்லவா. அந்த நீர்நிலைகள் தான் உலகத்தில் உள்ள மக்கள், குடிகள், தேசங்கள், மொழிகளாக இருக்கின்றன.
RCTA மேலும் அவர் எனக்குச் சொன்னதாவது: "அந்த வேசி, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கக் கண்டாயே, அந்த நீர்த்திரள் பல இனங்கள், பல நாடுகள், பல மொழிகளைச் சார்ந்த மக்கள் திரளைக் குறிக்கும்.
ECTA வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது; "அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.