Versions
TOV கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
IRVTA கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
ERVTA கிறிஸ்து கூட தனது திருப்திக்காக வாழவில்லை. அவர்கள் உங்களை நிந்தித்தால் என்னையும் நிந்திக்கிறவர்களாகிறார்கள் என்று எழுதப்பட்டிருப்பதைப் போலாகும் அது.
RCTA ஏனெனில், கிறிஸ்து தமக்கு உகந்ததையே தேடவில்லை. 'உம்மீது வசை கூறினவர்களின் வசைமொழிகள் என்மேல் விழுந்தன 'என்ற மறைநூல் வாக்கு அவரிடம் நிறைவேறிற்று.
ECTA கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. "உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என் மீது விழுந்தன" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!