Bible Versions
Bible Books

1 Kings 2:30 (NCV) New Century Version

Versions

TOV   பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவினிடத்தில் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு மறுஉத்தரவு கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.
IRVTA   பெனாயா யெகோவாவின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவிடம் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு பதில் கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.
ERVTA   பெனாயா கர்த்தருடைய கூடாரத்திற்குப் போய் யோவாபிடம்,"வெளியே வா! என அரசன் சொல்கிறான்" என்றான். ஆனால் யோவாபோ, "இல்லை, நான் இங்கேயே மரிக்கிறேன்" என்றான். எனவே பெனாயா அரசனிடம் திரும்பி வந்து யோவாப் சொன்னதைச் சொன்னான்.
RCTA   பனாயாசு ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவனைக் கண்டு, "வெளியே வா, இது அரச கட்டளை" என்றான். அதற்கு அவன் மறுமொழியாக, "நான் இவ்விடத்தை விட்டு அசையமாட்டேன்; இங்கேயே சாவேன்" என்றான். ஆகையால் பனாயாசு அரசரிடம் சென்று யோவாப் தனக்குக் கூறிய மறுமொழியை அரசருக்குத் தெரிவித்தான்.
ECTA   பெனாயா ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவரைக் கண்டு, "வெளியே வா; இது அரச கட்டளை" என்றான். அதற்கு அவர் மறுமொழியாக, "முடியாது; நான் இங்கேயே சாவேன்" என்றான். எனவே பெனாயா அரசரிடம் திரும்பி வந்து யோவாபு தனக்குக் கூறிய மறுமொழியைத் தெரிவித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us