Versions
TOV அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
IRVTA அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்கு மறுமொழியாக: யெகோவா தம்முடைய மக்களை சிநேகித்ததால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
ERVTA பிறகு ஈராம் சாலொமோனுக்குப் பதில் அனுப்பினான். ஈராம் அனுப்பிய செய்தியில் அவன், "சாலொமோன், கர்த்தர் தமது ஜனங்களை நேசிக்கிறார். அதனால்தான் அவர்களுக்கு அரசனாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்" எனக் குறிப்பிட்டான்.
RCTA அதற்குத் தீரின் அரசன் ஈராம் சாலமோனுக்குப் பதில் எழுதி அனுப்பினார்: "ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு செய்கிறதினால், தங்களை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.
ECTA அதற்கு தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: "ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். ஆதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.