Versions
TOV அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
IRVTA அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே யெகோவா என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
ERVTA அப்போது, ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசி வந்து, "அரசனே, அந்த பெரும்படையைப் பார். நானே கர்த்தர், என்று நீ அறியும்படி நான் அப்படையை உன் மூலம் தோற்கடிப்பேன்" என்று கர்த்தர் கூறுகிறார்.
RCTA அப்பொழுது ஓர் இறைவாக்கினர் இஸ்ராயேலின் அரசன் ஆக்காபிடம் வந்து, "ஆண்டவர் சொல்கிறதாவது: 'அந்த ஏராளமான மக்கட் கூட்டத்தை எல்லாம் நீ கண்டாய் அன்றோ? இதோ நாமே உண் ஆண்டவர் என்று நீ அறியும்படி இன்று அதை உன் கையில் ஒப்படைப்போம்' என்பதே" என்றார்.
ECTA அப்பொழுது ஓர் இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசன் ஆகாபை அனுகி, "ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; இந்தப் பெரும் படை முழுவதையும் பார்த்தாயா? நானே உன் ஆண்டவர் என்று நீ உணரும்படி, இதோ இன்று அதை உன் கையில் ஒப்புவிக்கிறேன்" என்றார்.