Bible Versions
Bible Books

2 Chronicles 32:17 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.
IRVTA   தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் தங்கள் மக்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் மக்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை அவமதிக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் கடிதங்களையும் எழுதினான்.
ERVTA   அசீரியா அரசன் மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா அரசன்தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: "மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப் பாற்ற முடியாது."
RCTA   மேலும், சென்னாக்கெரீப் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நிந்தனை நிறைந்த கடிதங்களையும் அனுப்பினான். அவற்றில் அவன், "மற்ற நாடுகளின் தெய்வங்கள் தங்களை வழிபட்டுவரும் மக்களை என் கைக்குத் தப்புவிக்கத் திறனற்றவராய் இருக்கின்றனர். அதுபோல், எசெக்கியாசின் கடவுளும் தம் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் போவதில்லை" என்று எழுதியிருந்தான்.
ECTA   மேலும் சனகெரிபு, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் பழிப்புரை மடல்களை எழுதினான். அதில் ஆண்டவருக்கு எதிராக, "மற்ற நாடுகளின் தெய்வங்களால் தங்கள் மக்களைஎன்னிடமிருந்து காப்பாற்ற இயலவில்லை; அதேபோன்று எசேக்கியாவின் கடவுளும் தன் மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us