Versions
TOV குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
IRVTA {பேதுரு மக்களோடு பேசுதல்} PS சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
ERVTA அம்மனிதன் பேதுருவோடும் யோவானோடும் சேர்ந்து கொண்டிருந்தான். அம்மனிதன் நலம் பெற்றதையறிந்து எல்லா மக்களும் ஆச்சரியம் கொண்டனர். சாலமோனின் மண்டபத்தில் பேதுருவிடமும் யோவானிடமும் அவர்கள் ஓடிச் சென்றனர்.
RCTA அவன் இராயப்பரையும் அருளப்பரையும் விடாமல், அவர்களுக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கவே மக்களெல்லாரும் திகைப்புற்று, ' சாலொமோன் மண்டபம் ' என்னும் இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தனர்.
ECTA நலமடைந்த அவர் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்று சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர்.