Versions
TOV அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
ERVTA சில பரிசேயர்கள், அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை என்றனர். ஆனால் சிலரோ, பாவம் செய்கிற எந்த மனிதராலும் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப் போகவில்லை.